இன்றைய காலத்தில் இளைஞர்களின் பெரிய பிரச்னையாக இருப்பது இளநரை.
தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அவை வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைக்கின்றன, அப்போது வெள்ளை முடி தோன்றும்.
தலைக்கும் பயன்படுத்தும் வீரியம்மிக்க ஷாம்புகளாலும், புரதம், இரும்பு சத்து குறைவதனாலும் வெள்ளை முடி தோன்றலாம்.
எனவே இளநரையை தடுக்க வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம்.
நெல்லிமுள்ளி,
செம்பருத்தி இலை,
மருதாணி இலை...
இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்யுங்கள். அதிலிருந்து 4 டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேங்காய் பால்-2 டீஸ்பூன், கொஞ்சம் டீ டிகாஷன் (பேஸ்ட் ஆகும் அளவுக்கு) கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
வாரம் ஒருமுறை இதுபோல குளித்து வந்தால், இளநரை கிட்டவே வராது.
http://lankasritechnology.com/view.php?22IAld0bdZ30Qd402cMM322cBn52bdeZBPB402e6AA2ecWo9race2JOA43
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக