தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 17, 2015

மனிதனை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை


எதிர்­வரும் 100 ஆண்டுகளில் மனிதர்களை ரோபோக்கள் எனப்படும் இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங் விடுத்துள்ளார்.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற நவீன மதிநுட்பம் தொடர்பான மாநாட்டில் அவர் உரையாற்றும் போது இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
செயற்கை மதிநுட்பமானது மனிதர்களின் முடிவுக்கு வழிவகை செய்யக் கூடும்.
செயற்கை மதிநுட்பத்துடன் கூடிய ரோபோக்களின் உருவாக்கமானது அந்த செயற்கை மதிநுட்பத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை விடவும் அந்த மதிநுட்பம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலையை ஏற்படுத்த வழிவகை செய்வதாக அமையும்.
அந்த வகையில் எதிர்வரும் 100 ஆண்டுகளுக்குள் செயற்கை மதிநுட்பம் மனிதர்களை விஞ்சி அவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்று விடும்.
அவ்வாறான நிலை ஏற்படுகையில் செயற்கை மதிநுட்ப கணனிகள் எமது இலக்குகளையொத்த இலக்குகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்படும்.
மேற்படி செயற்கை மதிநுட்பம் குறித்து உரிய பாதுகாப்பை மேற்கொள்ளாவிட்டால் அது மனிதர்களை இருண்ட எதிர்காலமொன்றிற்கு இட்டுச் செல்வதாக அமையும் என ஸ்டீவன் ஹவ்கிங் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment