தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, September 25, 2014

மின்சாரம் தாக்கியவர்களுக்கு மண்ணுக்குள் புதைத்து சிகிச்சை !!



உத்திரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த ராம் காலி பிரஜாபதி என்ற பெண்னை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது.

அவர் உணர்வற்ற நிலையில் இருந்ததையடுத்து கிராம மக்கள் அவரின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர்.

நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த ஊடகங்களில் பரவியுள்ளது.

ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இதுகுறித்து கூறியதாவது, ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார்.

செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை, நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது என்று கூறியுள்ளார்.

இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment