தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, August 26, 2015

உயிர் கொடுத்த தாயின் உயிரைக் காக்கும் மகன்: நெகிழ்ச்சியூட்டும் செய்தி

சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்புடன் கவனித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சாங்க்காங் நகரத்திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிராமத்தை சேர்ந்தவர் சென் க்சிங்யின்(48).
வீட்டில் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவருக்கு, தனது ஏழு வயதில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு கைகளையும் இழந்தார்.
இரு கைகளை இழந்தபோதும் தனது அன்றாடப்பணிகளை அவரே கவனித்து வருகிறார், மேலும் தங்களது குடும்பத்தொழிலான விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதில் நெகிழ்ச்சியூட்டும் விடயமாக, மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தனது 88 வயது தாயையும் கவனித்து வருகிறார்.
அன்றாடம் உணவுகளை தயாரித்து, அதனை தனது வாயில் பற்றியிருக்கும் ஸ்பூனால் தாயாருக்கு உணவை ஊட்டி வருகிறார்.
இவர் இவ்வாறு தனது தாயை பராமரித்து வருவதை சீன ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment