தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

நாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா? இதோ பிரச்சனைகள்!

பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆம், ஏசியினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும், அதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திப்போம்.
இதோ நாம் சந்திக்கும் பிரச்சனைகள்,
நுரையீரல் பாதிப்பு
ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சரும பாதிப்பு
அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும்.
சுவாசக் கோளாறு
மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன், மிகவும் குறைவான காற்று சுழற்சியினால், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
அலர்ஜி
ஏசி அறையில் சுற்றும் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி, தும்மலை அதிகரிக்கும்.
எரிச்சல்
ஏசியினால் சருமத்தில் மட்டுமின்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.
சளி
ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு சளி வந்தால், அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும். அதிலும் வைரஸ் தொற்றுகள் ஏசி அறையில் எளிதில் பரவக்கூடும்.
கண் பிரச்சனைகள்
ஏசியினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக