தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி: ஆச்சர்ய தகவல்

திருவண்ணாமலை அருகே மனித வடிவில் ஒரு அதிசய ஆட்டுக் குட்டி பிறந்ததால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதனை பார்த்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த காத்தவராயன், தனது வீட்டில் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அந்த ஆடு நேற்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் முதலில் ஈன்ற குட்டி இறந்து பிறந்தபோதும் அதன் முகம் மற்றும் வயிற்று பகுதி மனிதனை போன்று இருந்தது மிகவும் அதிசயமாக இருந்தது. அடுத்து பிறந்த 2 குட்டிகள் வழக்கம்போல இருந்துள்ளது.
மேலும், இதுபற்றி தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அந்த அதியச ஆட்டுக்குட்டியை பார்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக