தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பிள்ளையாருக்கு இன்று பிறந்தநாள் !

ஆவணி சதுர்த்தி விரதமானது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அனுஸ்டிக்கப்படும் விரதமாகும்.

ஆவணி சதுர்த்தியில் அதி காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூசைக்குரிய பொருட்களை தயார்படுத்தி கொண்டு கும்பம் வைத்து அதன் முன்பு விநாயகரின் திருவுருவை எழுந்தருளச் செய்து பூஜை வழிபாடுகள்,அர்ச்சனை செய்து தூபதீபம் சமர்ப்பித்து சந்திரனைப் பூசித்து விநாயக பூசையை முடித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த பூஜை வழிபாடுகள் முடிந்த பிறகு அன்றைய தினம் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத்தால் விஷ்ணு அவமானம் அடைந்தாராம்.
புட்பபதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பாத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மரு, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. இருப்பினும் சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.
கதிரவன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததை விநாயக சதுர்த்தி உணர்த்துவதாகச் சிலர் கருதுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக