தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கண்கலங்கும் கருடன்: நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் தோற்றம் !


ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் கருடன் கண்கலங்குவது போன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
வைணவத் தலங்கள் அனைத்திலும் பொதுவாக, கருவறையில் இருக்கும் மூர்த்தத்தை விட, கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கும்.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண பகவானை விட, கருடாழ்வார் உயரம் அதிகமாக காணப்படுகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை– காளஹஸ்தி பாதையில் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மன்னார் பேளூர் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இறைவனை விட, கருடாழ்வார் உயரம் அதிகம் என்பதால், கருடாழ்வார் தரை மட்டத்திற்குக் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இங்கு, கிருஷ்ணனின் கருணையைக் கண்டு வியந்து, கண்களில் இருந்து நீர் பெருகி கன்னங்களை நனைக்கும் கருடாழ்வாரின் தோற்றம் நெகிழ்ச்சியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக