தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 24, 2017

உலக அதிசயம் என்றால் என்ன?

உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்கிற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாதபைரவர் கோவிலில் குழந்தை தாயின்வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்த வடிவத்தில்இந்த விதமான Positions-ல் இருக்கும்என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
அதுஉலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில் குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் பூ மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.
அப்போ எப்படி ஒரு துல்லிய அளவில் ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை போல் வந்து விழும்.
வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால் அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.
ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.
யாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும்.டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.
சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம்.
ஆனால் ஆயிரம் வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகிவிட்டது.
இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால் ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும் செய்ய முடியாது.
வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது.இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்.
அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.
அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும்.
வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது.
போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
மேலை நாட்டு ஆய்வாளர்கள் தமிழகத்து கோவில்களை ஆராய்ந்து மிரண்டு ஓடினர். இது தமிழர்கள் மட்டுமே கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு ஏலியன்கள் உதவி செய்திருப்பார்கள் என்று வியந்து கூறினர்
தமிழரின் கட்டிட கலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
நமது முன்னோா்களின் திறமையையும் கலைநயத்தையும் போற்றி தலைவணங்குவோம் இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.

No comments:

Post a Comment