தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 நவம்பர், 2014

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.. (படித்ததில் பிடித்தது)


* அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்!
* நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்..
* வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்.
* ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்.
* என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்.
* புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்.
* வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடிய தருணம்
* நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்.
* சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்.
* எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்.
* அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
* முழு ஆண்டு பரீட்சைக்கு பயந்து கொண்டே எழுதுவதும்..
* பரீட்சை முடிந்ததும் 1.5 மாத விடுமுறையை எண்ணி மகிழ்வதும்..,
* நண்பர்கள் சட்டையில் இங்க்கை அடிப்பதும்...
* விடுமுறை முடிய போகுதேனு ஃபீல் பண்ணுவதும்..
* புதிய வகுப்புக்கு போகும் போது புதிதாக வரும் வாத்தியார் எப்படி பட்டவர் என பயப்படுவதும்...
* புதிததாக கொடுத்த புத்தகத்தை முகர்ந்து பார்ப்பதும்...
இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக