தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 நவம்பர், 2014

உயிரோட்டம் மிக்க கலாச்சாரம்!


தமன் மற்றும் தியூ மாவட்டப்பகுதிகள் முற்காலத்தில் பல போர்களை சந்தித்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, போர்த்துகீஸ் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பேசப்படுகின்றன.
தமன்கங்கா ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் இந்த யூனியன் பிரதேச மாவட்டம் அமைந்துள்ளது.
இறுக்கமற்ற உல்லாச வாழ்க்கை இயல்புடன் காட்சியளிக்கும் இது தன் இயற்கை எழில் அம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு இனம் மற்றும் கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழகிய கடற்கரைகள், போர்த்துகீசிய கட்டிடச்சின்னங்கள் மற்றும் கிறித்துவ தேவாலயங்கள் போன்றவற்றை இந்த தமன் மாவட்டம் கொண்டுள்ளது.
இந்த அழகிய பிரதேசம் ஒரு காலத்தில் ‘கலானா பாவ்ரி’ அல்லது ‘லோட்டஸ் ஆஃப் மார்ஷ்லேண்ட்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது.
மோதி தமன் மற்றும் நனி தமன் என்ற இரண்டு நகர்ப்பிரிவுகளாக தமன்கங்கா ஆறு இந்த தமன் மாவட்டத்தை பிரிக்கிறது.
தமன் நகர சுற்றுலா அம்சங்களில் பலவிதமான கலாச்சாரங்களின் கலவையான பாதிப்பு பிரதிபலிக்கிறது.
ஆதிகுடி கலாச்சாரம், ஐரோப்பிய கலாச்சாரம், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நவீன பெருநகர கலாச்சாரம் போன்றவற்றை இங்கு உணரமுடியும்.
தமன் பிரதேசத்தின் அழகிய கடற்கரைகள் சூரியக்குளியலுக்கு ஏற்ற இயற்கைத் தூய்மையோடு ஒளிர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக