தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 அக்டோபர், 2014

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு (2)..................


பேராசிரியர் பகவான் கூறியுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு நீதியரசர் தவேயின் கூற்றை ஆய வேண்டும். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரருக்கும் மத்வருக்கும் இராமானுசருக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே, எவற்றை முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்க வேண்டுமென்று தவே கூறுகின்றாரோ அந்த மகா பாரதமும், பகவத் கீதையும் தாம் என்பதில் அய்யமில்லை. வேத காலத்திலேயே மறுப்பியக்கங்கள் தோன்றி மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருந்தன. இல்லாதிருந்தால் பிற் காலத்தில் அவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் நமக்குக் கிடைத்திரா. சார்வாகர், லோகாயதர், சாங்கியர், மீமாம்சகர் வேத மறுப்பியக்கத்தைச் சார்ந்தோர்களாக இயங்கியிருக்கின் றனர். அவர்களைப் கண்ணன், பகவத் கீதையில், துஷ்கர்மன் (தீவினையர்), நரதாம (கீழ் மாந்தர், ஹுதஞான, அல் பமேத (அறிவிலிகள்), மூட (முட் டாள்கள், அபத்தவ, நஷ்தான், அசேத, சம்ஷ்யத்ம, நாஷ்தம, டம்பமன், அசுர, ராக்ஷச என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறான்.



பேராசிரியர் பகவான் கூறியுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு நீதியரசர் தவேயின் கூற்றை ஆய வேண்டும். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரருக்கும் மத்வருக்கும் இராமானுசருக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே, எவற்றை முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்க வேண்டுமென்று தவே கூறுகின்றாரோ அந்த மகா பாரதமும், பகவத் கீதையும் தாம் என்பதில் அய்யமில்லை. வேத காலத்திலேயே மறுப்பியக்கங்கள் தோன்றி மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருந்தன. இல்லாதிருந்தால் பிற் காலத்தில் அவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் நமக்குக் கிடைத்திரா. சார்வாகர், லோகாயதர், சாங்கியர், மீமாம்சகர் வேத மறுப்பியக்கத்தைச் சார்ந்தோர்களாக இயங்கியிருக்கின் றனர். அவர்களைப் கண்ணன், பகவத் கீதையில், துஷ்கர்மன் (தீவினையர்), நரதாம (கீழ் மாந்தர், ஹுதஞான, அல் பமேத (அறிவிலிகள்), மூட (முட் டாள்கள், அபத்தவ, நஷ்தான், அசேத, சம்ஷ்யத்ம, நாஷ்தம, டம்பமன், அசுர, ராக்ஷச என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறான்.
வால்மீகி இராமாயணத்தில், யதாஹிசோர்: ஸ்ததாஹிபுத் தஸ்ததா:ஹதம்னாஸ்திகம் த்ரவித்தி:  - அதாவது திருடன் எப்படியோ அப்ப டியே புத்த சமயத்தவன் என்று அறிந்து கொள் என்று உள்ளது. பவுத்தர்களைத் திருடர்களுக்கு ஒப்பானவர்கள் என்று வால்மீகி கூறக் காரணம் என்ன? கடவு ளையும் ஆன்மாவையும் மறுத்ததால் பௌத்தர்களுக்கு இந்தப் பட்டம். அறிவையே தெய்வமாகக் கருதிய சமணர்களுக்கு, சம்ஷ்யதம (எதிலும் அய்யுறுவோர்  சந்தேகப் பிராணிகள்)  என்று பட்டம்.
மாந்த வரலாற்றில் உண்மையான முன்னேற்றதிற்குத் தேவையான விளையுள்ளுக்க்குரிய உழைப்பையும் சமுக உறவுகளியும் பழித்துரைக்கும் வேதங்கள் கூறியவற்றை எதிர்த்து, அறிவுக்கு முதன்மையிடம் கொடுத்து மக்கள் நலன் பேண விரும்பியவர்களை எதிர்கொண்டு முறையான ஞாயமான அமைவுகளைக் கூறவியலாத சனாதன வாதிகள் மேற்கண்டவாறு பழிதூற்றலா யினர் என்பது வரலாற்று உண்மை.
மகாபாரதத்தில் சாந்தி பர்வம் ஒரு பகுதி. குருசேத்திரப் போர்க்களத்தில், தலைக்குக் கீழ் உள்ள பகுதிகள் அனைத் தும் கால்கள் வரையில் முழுவதுமாக அம்புகளால் துளைக்கப்பட்ட உட லோடு விட்டுமன் (பீஷ்மன்) கிடக்கை யிலே, வெற்றி பெற்று ஆட்சியில் அமரக் காத்திருக்கும் தருமனுக்கும் அவனுடைய உடன்பிறப்புகளுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் நல்லாட் சியின் அறங்களைப் புகட்டுவதாக அமைந்த பகுதி. சாவின் விளிம்பில் கிடந்துகொண்டு, கண்ணனுடைய துணையுடன்   பல்லாயிரக் கணக்கான சொலவங்களை அறிவுரைகளாக வழங்குவதாக அமைந்தது. எப்படி ஆட்சி புரிவது, நன்மை  தீமை,, ஒழுக்கங்கள், ஆண்  பெண்களுக்குரிய அறங்கள்,குற்றங்கள், அவற்றுக்குரிய தண்டனைகள், வரிவிதிப்பு, போர்க்கள அறங்கள் எனப் பலவாறு விளக்கப் பட்ட சாந்தி பர்வத்தின் எல்லா அத் தியாயங்களிலும் வேரோடி இருப்பது சனாதன தரும,  நால்வருண அறமாக வும் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப் பனவாகவும் இருப்பதை உணரவியலும்.. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்ப் போம். கட்டுரையாளன் படித்த மொழி பெயர்ப்பு நூலில் (ஸ்ரீ மஹா பாரதம், மணலூர் வீரவல்ல்லி இராமானுஜா சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) உள்ள வாறே மேற்கோள்கள் அளிக்கப் பட்டுள்ளன.
அத்தியாயம் 11 (ராஜதர்மம்  தொடர்ச்சி).: கர்ம மார்க்க்கமே சிறந்தது என்பதை விளக்குகையில் விட்டுமண் இடையிலே ஒரு முனிவனுக்கு ஒரு பறவை நாற்கால் பிராணிகளுள் பசு சிறந்தது. உலோகங்களுள் தங்கம் சிறந்தது. சப்தங்களுள் வேதம் சிறந்தது. இரண்டுகால் பிராணிகளுள் பிரா மணன் சிறந்தவன். பிராமணனுக்கு ஜனனம் முதல் மரணம் வரையில் காலத்துக்குத்தக்கபடி ஜாதகர்மமுதல் ஸ்மசானத்தில் செய்கிற முடிவான கார்யம் வரையிலுள்ளவை எல்லாம் வேதத்தால் விதிக்கப்பட்டன.  என்று கூறியதாக உரைக்கின்றான்.
அத்தியாயம் 14 (ராஜதர்மம்  தொடர்ச்சி).:  எல்லாப் பிராணிகளிடத்தும் ஸ்னே ஹமும் கொடுப்பதும் வேதமோதுவதும் தவமும் பிராமணர்களுக்குத்தான் தர்மமாகும். அரசர்களுக்கு இவை தர்மமாகா.
பிராமனன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன்,, மற்றுமுள்ள எவனும் எந்தச் சமயத்திலும் சாந் தனான பிராம்மணனை ஒரு புல்லாலும் அடிக்கக் கூடாது. பிராம்மணனைப் பெரிய தடியெடுத்து அடிக்க ஓங்கின பாவி முந்நூறு வருஷங்கள் நல்ல நிலையை அடையமாட்டான், அடிப்பவன் ஆயிர்ம் வருஷம் நரகத்தில் வீழ்வான்.  மிரட்டுவதற்காகத் தடியை ஓங்கினாலே தண்டனைக்குரைய வனாகின்றான்.
பசு வதையும் கள்ளுண்ணலும்
அத்தியாயம் 33: ராஜதர்மம் தொடர்ச்சி   விதிவிலக்குகள் சாஸ்திர விதியல்லாமல் பசுக்களைக் கொல்லுவதும் கொல்லச் செய்வதும் கூடாது.  விதிப்படியுள்ள பசுக்களின் வதம் அவைகளுக்குள்ள அனுக்ர ஹமாம். சாஸ்திரத்திற் சொல்லியபடி ஸோமரஸத்தின் ...பெருமையாகிய  உண்மையை அறிந்து ஸோமமென்னும் கொடியை விகரயஞ்செய்வது தோஷ மாகாது
உயிரிழப்பு என்பது உலக இயற்கை என்பதால் போர்க்களத்தில் உயிரிழந்த உற்றவர்களுக்காக வருந்தத் தேவை யில்லை என்பதை விளக்க வந்த கண் ணன் உயிரிழந்த பல பெரியவர்களின் கதைகளைக் கூறுகிறான். அவற்றுள் ஒன்று ப[சுவதைக்குச் சான்று பகர்ந்து நிற்கின்றது.
அத்தியாயம் 28 ராஜதர்மம் தொடர்ச்சி
சங்கிருதி என்னும் மன்னனின் புதல்வனான இரந்தி தேவன் இந்திரனி டமிருந்து பல வரங்களைப் பெற்று நல்லாட்சி புரிந்து வந்தானாம். அவனுடைய நல்லாட்சியினால்  மகிழ்ந்த ஆக்கள் (பசுக்கள்) தாமாகவே தங்கள் வாழ்விடங்களைவிட்டு அவனை அடைந்து, தங்களை நற் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வந்தனவாம் அவன் அவற்றை எதற்குப் பயன்படுத்தினான் தெரியுமா? தம் குடிமக்களின் தேவை களுக்காக அல்லாமல் வேள்விக்காக பயன்படுத்தியுள்ளான்.. மேலே படியுங்கள்:
அவனால் யாகத்தில் உபயோகிக் கப்பட்ட (தாமாகவே வந்த) பசுக்களின் தோற்சுமையிலிருந்து கசியும் ஜலம் சர்மண்வதியென்னும் பெயர் கொண்ட பெரிய நதியாகிப் பிரஸித்தி பெற்றி ருக்கிறது. அந்த அரசன் பெரிய ஸபை யில் பிராமணர்களுக்குஅதிகமான ஸுவர்ணங்களைத் தானஞ் செய்தான். தங்கத்தைப் பெற்ற பிராமனர்கள் எனக்கு இவ்வளவு; உனக்கு எவ்வளவு? என்று கேட்டு மன்னன் அளித்த தங்கதை வாரிக்கொண்டு மன்னனை வாழ்த்தினார்களாம். வாழ்த்த மாட்டார்களா பின்னே? தமிழ்நாட்டு மன்னர்கள் தங்கள் கொடைமடத்தால் பார்ப்பனர்களுக்கு, பிரம்ம தேயம் என்றும் சதுர்வேதி மங்கலங்கள் என்றும் வாரி வழங்கினர் அல்லவா?)
ஸங்க்ருதியின் புத்திரனான ரந்தி தேவன் வீட்டில் ஓர் இராத்திரிக்கு ஆயிரத்து நூற்றிருபது பசுக்கள் உபயோகிக்கப்பட்டன. பார்ப்பனர்கள் நனறாக, போஜனம் செய்து மகிழ்ந்தனர்.
விதிப்படி செய்யப்படும் பசு வதை கொல்லப்பட்ட பசுக்களுக்கு நன்மை யாம். பசுவைக் கொல்லும்போது ஹோதா என்னும் ப்ரோகிதன் சொல்ல வேண்டியது:
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வமத்ரிகா அத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிர்ப்ரூயத்  பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல், அடிப் பதை நிறுத்தாதே. (சுவாமி சிவானந்த சரசுவதியின் மத விசாரணை) சிவானந்த சரசுவதியின் ஞானசூரியனைப் படித்து மேலும் பல விளக்கங்களைப் பெறுவீர்.
இசுலாமியர் ஹலால் சொல்லி உயிரிகளைக் கொல்வது போல்வது இது.
அத்தியாயம் 34  ராஜதர்மம் தொடர்ச்சி  ப்ராயச்சித்தங்கள்  கழுவாய்
அரசனே! எவன் நியமமுள்ள பிராமணர்களுக்குக் கம்போஜ தேசத் திலுண்டான நூறு குதிரைகளைத் தானஞ்செய்தும் அல்லது ஒரு பிரா மணனுக்காவது அவன் வேண்டியதெல் லாம் தானஞ்செய்வதுடன் அத்தா னத்தைத் தான் சொல்லிக் கொள் ளாமலும் இருக்கின்றானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடு கின்றான்.
அத்தியாயம் 37
விட்டுமன், கண்ணன் ஆகியோர் விளக்கியுரைத்த அறிவுரைகளுக்குப் பின்னர்ப் பாண்டவர்கள் அஸ்தினா புரத்திற்கு வருகிறார்களாம். அவர்கள் வரும்பொழுது, அந்த நகரத்துப் பெண்கள் நாணத்துடனும் பொறாமையுடனும் பார்த்துக் கூறியதைக் கேளுங்கள்
ஓ! பாஞ்சாலி! மஹரிஷியை அடைந்து விளங்கும் கவுதமியைப் போல புருஷர் களில் மிகச் சிறந்த இப்பதிகளை யடைந்து விளங்கும் நீயே பாக்கியமுள் ளவள். கல்யாணி! உன் காரியங்கள் பழுதில்லாதவை. உன்னுடைய தவமே தவம் என்றுகொண்டாடினார்கள்.
அய்ந்து பேரைக் கணவர்களாகக் கொண்ட பாஞ்சாலியின் தவமே தவம மாம். அசுதினாபுரப் பெண்களுக்கிருந்த ஏக்கத்தைக் கவனியுங்கள். ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்களும் மகிழ்ந் திருக்கக் கூடும். அவர்களுடைய  பெற் றோரோ கண்வன்களோ ஒப்பவில்லை போலும். இதில் மற்றொரு செய்தியைக் கவனியுங்கள்.. முனிவன் ஒருவனின் மனைவி கவுதமியை ஒப்பபிட்டுப் பேசியதிலிருந்து கவுதமிக்கும் பல கணவன்களோ என எண்ணத் தோன்று கிறது.
- பெங்களூரு
முத்து.செல்வன்


Read more: http://viduthalai.in/component/content/article/97-essay/89120----2.html#ixzz3GCgu5LQt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக