தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 நவம்பர், 2017

*திரையிசைப்பாடல்களில் இலக்கணம்:*


*திரையுலகம் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையக்கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக்கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.*

🖌 *தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...*

🖌 *அடுக்குத்தொடர்:* ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.*

🖌 *இரட்டைக்கிளவி:*
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச்சாலையிலே.

🖌 *சினைப்பெயர்:*
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌 *பொருட்பெயர்:*
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச்சொல்ல

🖌 *இடப்பெயர்:*
வீடுவரை உறவு; வீதிவரை மனைவி!

🖌 *காலப்பெயர்:*
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

🖌 *குணம் அல்லது பண்புப்பெயர்:*
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌 *தொழில் பெயர்:*
ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

🖌 *இறந்த காலப்பெயரெச்சம்:*
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

🖌 *எதிர்காலப்பெயரெச்சம்:*
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

🖌 *இடவாகுபெயர்:*
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

🖌 *எதிர்மறைப்பெயரெச்சம்:*
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

🖌 *குறிப்புப்பெயரெச்சம்:*
அழகிய தமிழ்மகள் இவள்; இருவிழிகளில் எழுதிய மடல்!

🖌 *ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:*
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

🖌 வன்றொடர்க்குற்றியலுகரம்:*
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌 *நெடிற்றொடர்க்குற்றியலுகரம்:*
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

🖌 *உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:*
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

🖌 *இரண்டாம் வேற்றுமை உருபு:*
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே.

🖌 *மூன்றாம் வேற்றுமை உருபு:*
கண்ணானால் நான் இமை ஆவேன் ..

🖌 *பெயர்ப்பயனிலை:*
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக