தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 நவம்பர், 2017

செல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் பாருங்கள்!


வீட்டில் திடீரென பிரச்னைகள், உடல் நோவு, விரயச் செலவு, குடும்பச்செலவு எகிறுதல் போன்ற நீங்க சேர்த்து வைத்த செல்வத்தைக் குறைக்கும் நிகழ்வுகள் ஏற்படுகிறதா?
அப்படி நேர்ந்தால் நீங்கள் சுதாரித்துக்கொண்டு உங்களது செல்வத்தை காத்துக்கொள்ள இந்த அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

  • சமையல்கட்டில் கழுவப்படாத எச்சில் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே கிடந்திருத்தல்
  • வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுதல்.
  • தலைமுடி கற்றைகள் தரையில் விழுந்து சுழன்று கொண்டேயிருத்தல்
  • சுவர், ஜன்னல், வாசல்கள் மேல் தூசி ஒட்டடைகள் சேர்ந்திருத்தல்
  • சூரியன் மறைந்தபின் வீட்டை பெருக்குகல், துடைத்தல்
  • பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாளில் தலைக்குக் குளித்தல்
  • ஆண்கள் புதன், வெள்ளி தவிர மற்ற நாளில் தலைக்குக் குளித்தல்
  • வீட்டுக்குழாய்களில் தண்ணீர் சொட்டுதல்
  • வீட்டில் கரையான் புற்று இருத்தல்
  • பூராண், தேள் போன்ற விஷ ஜந்துகள் வீட்டில் உலாவுதல்
  • அதிக நேரம் ஈரத் துணிகளை போட்டு வைத்தல்
  • உணவுப் பொருட்களை வீணடித்தல்
  • உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை அடியோடு தீரும்வரை வாங்காமல் இருத்தல் மற்றும் அதன் பாத்திரங்களை கழுவி வைத்தல்.
  • குறைந்த பட்ச வெளிச்சம் கூட இல்லாமல் வீட்டை இருட்டாக வைத்தல்.
  • இனிமையான இசையை கேட்காமல் அபசகுனமான இசையை அல்லது கொடூர இசையை கேட்டல்.
  • இல்லை, இல்லை, வராது, வராது, வேண்டாம், வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரித்தல்
  • படுக்கையையும், பூஜை பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்தல்
  • வாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை படுக்கைவாட்டில் அலங்கோலமாக வைத்திருத்தல்
  • பகல் பொழுதில் வீட்டில் பெண்கள் தூங்குதல்.
  • தேவைக்கு அதிகமான பொருட்களை வைத்து இருத்தல் மற்றும் வீணடித்தல்

இவையெல்லாம் செல்வம் குறைவதை உணர்த்தும் நிகழ்வுகளாகும். இவற்றை தவிர்த்தால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையவே குறையாது.

http://www.manithan.com/lifestyle/04/150130

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக