தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 6, 2015

சூப்களின் மருத்துவ பலன்கள்

நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.
ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.
துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.
அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.
அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
* 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.
இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.
இதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.
* பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.
இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.
* இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.
இவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.

No comments:

Post a Comment