தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 அக்டோபர், 2015

ஆணிடம்.... பெண் எதிர்பார்ப்பது என்ன?

பெண்களிடம், ஆண்கள் விரும்பும் விடயம் எதுவென்றால் கேட்டால், அவர்கள் தங்களது ரசனைகளுக்கேற்றவாறு அழகு, அடக்க ஒடுக்கம் என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்வார்கள்.
ஆனால், பெண்களிடம் இதே கேள்வியை எழுப்பினால், ஏறக்குறைய ஒரே மாதிரியான பதில்கள் கிடைக்கும்.
பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பவை:
1. ஆண்களின் நிறத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள், அவர்களது மீசைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதிகமான பெண்களுக்கு மீசை வைத்த ஆண்கள் என்றால் பிடிக்கும்.
2. ஆடை அலங்காரத்தில் ஆண்களை விட அதிக கவனம் செலுத்தும் பெண்கள், தங்களுக்கு பிடித்த ஆண்கள் நன்றாக ஆடை அணிய வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள், பார்ப்பதற்கு சுமாராக இருக்கும் ஆண்கள் கூட தங்கள் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தி, தங்களை இன்னும் அழகாக காட்டிக்கொள்ளலாம்.
3. மிக முக்கியம் பேச்சுத்திறன், பெண்ணிடம் முதல் முறையாக பேசும்போது, அவர்களை முதல் சந்திப்பிலேயே கவர்ந்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள்.
இந்த தப்பு கணக்கு, கடைசி வரை தப்பான கணக்காகவே மாறிவிட வாய்ப்புள்ளது.
பெண்கள் பேசுவதற்கும் சந்தர்ப்பம் கொடுத்து, கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள்.
4. மானே தேனே...நீ அழகானவள்....அருமையானவள் என்று வர்ணித்தால் பெண்களுக்கு பிடிக்கும்.
ஆனால், இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விட்டாலும், மனதுக்குள் குதூகலித்துக்கொள்வார்கள்.
இந்த வர்ணிப்புகளை கொஞ்சம் அளவோடு வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில் தினந்தோறும் இந்த வர்ணிப்புகளை கேட்டுக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.
ஒரு கட்டத்தில் நீங்கள் சொல்வது பொய்யானவை என்று முடிவெடுத்துவிடுவார்கள், அதுமட்டுமின்றி நீங்கள் சொல்லும் பிற விடயங்களில் கூட பொய் இருக்கிறது என்று சந்தேகப்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொய்யான வர்ணிப்புகளையும், பெண்களிடம் பொய் சொல்வதையும் நிறுத்திவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக