தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உண்மை வரிகள்.....சில


1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ்
மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக
இருக்கவேண்டிய அவசியமில்லை..
கைக்குழந்தையாக இருந்தாலே
போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன
சாதித்தாய் என எவரேனும் கேட்டால்,
நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை
தான் எனசொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள்
என்பதை ஔவையாரின்
பெயரிலிருந்தே அறியலாம் = How ?
Why ? யார் ?
4. பெண்களுடைய தைரியங்களுக்கு
ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப்
பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ
பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம்,
பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர
தயங்குகிரோம்.
6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை
அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..
7. காதலித்து பார்… கழிவறையில்
கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து
பார்… அங்கே வர வேண்டியது
நிம்மதியாக வரும்…!!
8. இலங்கையில் எண்ணை கிணறு
இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே
தூக்கில் போடபட்டு இருப்பார்
அமெரிக்காவால்..!
9. இலவசத்தை நம்பி ஒட்டு போடும்
மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம்
வருவது என்பது பிச்சைகாரன்
சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக