தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

தர்பூசணி சாப்பிடாதீங்க...தீமைகள் ஏராளம்!

கோடைகாலத்தில் அனைவரையும் குளிர வைக்கும் தர்பூசணி பழத்தில் தீமைகளும் மறைந்துள்ளன.
தர்பூசணி கோடையின் வரப்பிரசாதம் மட்டுமல்ல அதிகமாக உட்கொண்டால், பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும்.
இதில் 92% நீரின் பங்கு இருப்பதால், அஜீரண கோளாறு, வயிற்று போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது, இது நமது உடலினுள் சுலபமாக கொழுப்பாக மாறும் தன்மை உடையது.
சளிப் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். அப்படி மீறி சாப்பிட முற்பட்டால் அதிகப்படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சிறுநீர் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு உங்களது சிறுநீரக பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவாக தர்பூசணியை சாப்பிடுவது நல்லது. அதிகம் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டு உடலுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
அதிகப்படியாக தர்பூசணி உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக