தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 17, 2015

கண்களுக்கு கீழே கருவளையமா? சூப்பரான டிப்ஸ்


பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஏனெனில், வாய் பேசாத வார்த்தைகளை, அவர்களின் கண்கள் பேசிவிடும்.
அப்படிப்பட்ட கண்களுக்கு கீழே கருவளையம் வந்தால், முக அழகே போய்விடும்.
அதற்கான வழிகள் இதோ,
1. கண் கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும்.
2. நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும்.
3. வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
4. பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.
5. வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்.
6. கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.
7. திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.
8. உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.
9. தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும், இவ்வாறு 5-6 முறை செய்யவும்.
10. தோடம்பழத்தின் தோல் சக்கையை கண்கள் மீது வைத்து அரை மணித்தியாலங்களுக்கு பின்னர் அதனை எடுத்து விட்டு கண்களை நன்றாக குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் போகும்.

No comments:

Post a Comment