தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஜூன், 2014

மாதவிடாய் வலியால் அவதியா? வீட்டிலே சரிசெய்ய வழிமுறைகள் !

சுறுசுறுப்பாக சுற்றித்திரியும் பெண்களை மாதத்தின் சில நாட்களில் வாட்டி வதைக்கும் ஒன்று மாதவிடாய் சுழற்சி.
இந்த சுழற்சியானது சில நேரங்களில் கணிக்க முடியாமல் அவதிப்படுத்தும். சில நாட்களில் 2 வாரங்கள் இடைவெளியும், வேறு சில நாட்களில் 7 நாட்கள் இடைவெளியிலும் கூட இந்த 3 நாள் பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
இந்த நாள் பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், கலவிமுறை இனப்பெருக்கம் தொடர்பாக, மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.
இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வீட்டில் உள்ள பொருட்கள் மூலமே சரி செய்யலாம். இவை பரிசோதனை செய்யபட்டு பலன் அளித்த வழிமுறைகள்.
கால்சியம் அவசியம்
கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும்.
நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
என்ஸைம் முக்கியதுவம்
மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.
வலியை போக்க
கேரட் கண்களுக்கு மிகவும் நல்ல உணவாக இருந்தாலும், மாதவிடாய் வலியை நீக்கவும் உதவுகிறது. கேரட் ஜுஸை ஒரு கிளாஸ் தினமும் குடித்து வந்தால், முறையான இரத்த ஓட்டத்தைப் பெற முடியும் என்று மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சீரான இரத்தப் போக்கு
உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.
லாவெண்டர்
தன்னுடைய அமைதிப்படுத்தும் மற்றும் ஆற்றுப்படுத்தும் குணத்திற்காக பெயர் பெற்றுள்ள மருந்தாக லாவெண்டர் உள்ளது.
மாதவிடாயின் போது லாவெண்டர் எண்ணெயை வயிற்றில் தடவினால், 10 முதல் 15 நிமிடங்களுக்குள் வலியைக் குறைத்திட முடியும்.
ஓமம்
மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும்.
ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.
வெந்நீர் குளியல்
மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் அதிகளவு வெந்நீர் படும் வகையில் வெந்நீர் குளியல் போடவும். இதன் மூலம் அந்த பகுதியின் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.
இஞ்சி
மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும்.
இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களை அதிகளவில் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் நாட்களை வலியில்லாத நாட்களாக்கிட முடியும். ஏனவே, சிட்ரஸ் பழங்களை ஜுஸாக்கி குடித்து வலியைக் குறைத்திடுங்கள்.
உடற்பயிற்சி
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வர வேண்டியது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான பெண்கள், குறிப்பாக சோர்வாக இருக்கும் வேளைகளில் அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வதில்லை. இது தவறான அணுகுறையாகும்.
உடற்பயிற்சி செய்வதன் மூல் அடிவயிற்றுப் பகுதியிலும், உடலின் பிற பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீரடைவதால், வலியை பெருமளவு குறைக்க முடியும்.
நொறுக்கு தீனிகளை ஒதுக்குங்கள்
மாதவிடாய் நாட்களில் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்கு நோ சொல்லுங்கள். பர்கர்கள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடாமல் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அதுமட்டுமல்லாமல், கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக