தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2015

சில வகையான மாத்திரைகளை உணவுடன் சேர்த்து உள்ளெடுப்பது ஏன்?

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் மாத்திரை வழங்கும்போது உணவுக்கு முன்னர், உணவுக்கு பின்னர் எனும் நிபந்தனைகளை முன்வைப்பது வழக்கமாகும்.

எனினும் நம்மில் பலர் இதற்கான காரணத்தினை அறியாமலேயே மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றோம்.
நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் சில நேரடியாகவே உடல் இழையங்களால் அகத்துறுஞ்சப்பட்டு செயற்பட ஆரம்பிக்கின்றன.
ஆனால் மற்றும் சில மாத்திரைகள் செரிமான பாதையின்(Digestive Tract) ஊடாக பயணம் செய்வதன் மூலமே படிப் படியாக பயன்தரக்கூடியதாக இருக்கின்றன.
இவ்வாறு செரிமான பாதையின் ஊடாக மாத்திரைகள் பயணம் செய்வதற்காகவும், வலிமை மிக்க மாத்திரைகள் நேரடியாக குடல் பகுதிகளை தாக்குதன் மூலம் குடற்புண்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே அவ்வாறான மாத்திரைகள் உணவுடன் பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக