தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஜனவரி, 2016

சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லதா?

கல்யாணத்திற்காக தயாராவதற்கு முன் பல விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. மக்கள் பல வயதுகளில், பல சூழ்நிலைகளில் திருமணம் புரிகிறார்கள். நாம் இப்போது திருமணத்தை தள்ளிப்போடாமல் சீக்கிரம் செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களைப் பற்றி அலசுவோம். திருமணம் எப்போதுமே இருவருக்கிடையில் உள்ள ஒரு வலுவான பற்றுணர்வுடன் தொடர்புடையது.

இளம் வயதில் திருமணம் செய்வதால், ஒரு வலுவான உறவுமுறையை வெகு நாட்களுக்கு மகிழ்ச்சியையும், பரவசத்தையும் அடைய முடிகிறது. விரைவில் திருமணம் செய்வதில் இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு அம்சம். திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதன் மூலம், இளம் வயதிலேயே பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படலாம்.
திருமணம் மனதளவில் ஒரு நல்ல முதிர்வு நிலையை அடைய உதவுகிறது. நீங்கள் மனதளவில் முதிர்வற்றவராக இருந்தால், முதிர்ச்சி அடைவதற்கு ஒரு நல்ல வழி திருமணம். இளம் வயதில் திருமணம் புரிவது இளம் வயதிலேயே நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது. பல தியாகங்கள் மற்றும் விட்டுக்கொடுத்தல்கள் காரணமாக, நீங்கள் நெடுநாட்களுக்கு பல சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய நல்ல அனுபவம் வாய்ந்தவராக திறனுள்ளவாராக மாறிவிடுவீர்கள்.

- See more at: http://www.manithan.com/news/20151230118207#sthash.lXmxzjeD.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக