தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

காபி பிரியரா நீங்கள்? ஓர் எச்சரிக்கை தகவல்!


காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கலேனா பொழுதே விடியாது, சுறுசுறுப்பா வேலை செய்ய முடியாது என்று கூறுபவர்கள் பலரும் உண்டு.
இப்படி காபிக்கு அடிமையானவங்க நிறைய பேர் இருக்காங்க.
பொதுவா ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. இதில், 'காஃபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது.
அதே சமயம், நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.
நன்மைகள்
இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன.
இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.
தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம் என சுவீடனை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமா காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்குமாம்.
தீமைகள்
காபியில் உள்ள 'கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அல்சர் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது.
மேலும் அதிக அளவில் காபி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.
அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய கவனத்திற்கு
*வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம் கொண்டும் சூடுபடுத்தவே கூடாது.
*டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு.
*இன்ஸ்டண்ட் காபியைவிட டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதே பாதுகாப்பானது.
*அன்றாடம் 2 கப் காபிக்கு மேல் வேண்டாம்.
*மேலை நாடுகளில் அதிக அளவில் 'கோல்டு காபி’(Cold Coffee) தான் அருந்துகிறார்கள். சூடான காபியைவிட, குளிர்ந்த காபி குடிப்பதே நல்லது.
*காபி ஸ்ட்ராங்காக, சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிக்கரி சேர்க்கப்படுகிறது. காபியில் 20 சதவீதம் தான் சிக்கரி சேர்க்க வேண்டும். அதிகம் சேர்ப்பது நல்லதல்ல.
*காபிக்கு அடிமையானவர்கள், காபியை உடனடியாக நிறுத்திவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகக் காபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக