தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 30, 2017

இமயமலையில் மர்ம மனிதன் சிவனா?? - ஐம்பூதங்களை அடக்கும் மனிதர்கள்.!!

புராணங்கள் மற்றும் பண்டைய வரலாறுகள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும், என்பது ஆய்வாளர்களினதும், விஞ்ஞானிகளினதும் கருத்து.
சிவனின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம். என்பதும் ஆய்வாளர்களின் ஒரு வாதம்.
இங்கே ஆன்மீக வாதி, நாத்தீக வாதி என்பதும் வாதம் அல்ல என்பதை கவகத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். மத நம்பிக்கைகளை தாக்கும் பதிவு அல்ல இது.
அறிவியல் ரீதியாக சிவன் பார்க்கப்படுகின்றார். அன்பே சிவன் உனக்குள்ளேயே கடவுள் இருக்கின்றான் அவனை வெளியே தேடாதே என்பது இந்து மதக் கொள்கை என்றும் கூறலாம் தானே.
அந்தவகையில் சாதாரண மனிதரான சிவன் என்பவர் தியானம், ஆழ்மன சக்தியை அதீதமாக திரட்டி அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் எனும் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு.
இன்றும் புராணங்களில் இமயமலையில் தவம் மேற்கொண்ட மர்ம மனிதனாகவே கூறப்படும் சிவன் தியானங்களை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது. பல புராணங்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
அதே போல் சிவன் தொடர்பாக கூறப்பட்டுள்ள புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைத்து தேவர்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே வர்ணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு சக்திகள் காணப்படுகின்றன ஐம்பூதங்களை அடக்குகின்றவரே தேவர்களாகவும் கடவுள்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லட்சுமி, இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் அனைவரும் கடவுள்களாக கூறப்படுவது அவரவரின் தனிச் சக்திகளின் அடிப்படையிலேயே.
உதாரணம் வாயு தேவன், அக்கினி தேவன் எனத் தொடங்கி தெய்வங்களாக கூறப்படும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.
அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது.
காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார்.
கடவுள் என்பவர் ஒளியாக காணப்படுகின்றார் இந்த மதக் கருத்து என்பது நவீனத்துவ பிக்பாங் கொள்கைக்கு கூட இது பொருந்தும். ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரணானது.
கடவுள் மூளையே என்பதில் சந்தேகம் என்னவென்றால், தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்க்கும் போது தியானப் பயிற்சி மூலம் அதீத சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது.
அப்படியானால் தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை இயக்க முடியுமா? இதன் மூலம் விசேட சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் ஆய்வாளர்களிடையே எழுகின்றது.
ஆனாலும் ஆழ்மனத்தின் சக்தி தற்போதைய நவீன உலகில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றதனை அறிய முடியுமாகதாகவே இருக்கின்றது.
ஆழ் மனத்தின் எண்ணத்தை சின்ன உதாரணத்தில் மூலம் விளக்க முடியும்.
அதாவது நாம் சன நெருக்கடியான பேருந்து ஒன்றில் பயணித்து கொண்டிருப்போம். அதே பேருந்தில் எமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏறுகின்றார்.
எமக்கு பின்னால் உள்ள அந்த நண்பர் எம்மை கண்டிருப்பார் ஆனால் நாம் அவரை கண்டிருக்க மாட்டோம். சில வேளைகளில் அவரும் எம்மை கண்டிருக்க மாட்டார்.
இந்த நிலையிலேயே அவர் எம்மை கூப்பிட்டது போல் ஓர் உணர்வு தோன்றி நாமாக அவரை திரும்பி பார்ப்போம் இது ஆழ்மனத்தின் எண்ணத்தின் பயணத்தை உணர்த்தும் ஓர் உதாரணமாக கூறப்படுகின்றது.
தற்போதைய உலகில் ஒரு சிலர் அதீத சக்திகளை கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். என்பது செய்திகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மேலும் இந்த ESP மூளையின் சக்தியில் உள்ளுணர்வும் உள்வாங்கப்படுகின்றது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் நடப்பனவற்றை ஒருவரால் இந்த சக்தியின் மூலமாகவே கூற முடிகின்றது.
வரலாற்றிலும் சரி தற்போதைய உலகிலும் சரி இது நிரூபனமான ஒன்றே. ஆனாலும் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு சிலரால் எது உண்மை எது பொய் என்ற பாகுபாடு தெரியாமல் இருப்பது வேதனை.
அடுத்து பார்க்கப்போவது மனித ஆயுளையும் மூளை நிர்ணயம் செய்கின்றது என்பதனையே.
ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பும் ஓர் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது “ஹைபோதாலமஸ்” மூளையின் முக்கிய உறுப்பு. உடல் செயற்பாடுகள் அனைத்திற்கும் உதவுகின்றது.
நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன்களின் கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு, செல்களின் மீள் உருவாக்கம் இப்படி பல முக்கிய செயற்பாடுகளையும் செய்வது இதுவே.
எமது புராணங்களில் சித்தர்களும், முனிவர்களும் பல்லாண்டு காலம் வாழ்ந்ததற்கு காரணம் தியானமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹார்மோன்கள் செய்யும் செயற்பாடு மூளையுடன் தொடர்பு பட்டது என ஆச்சரிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார்கள். இதனை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார் டாங் சே கெய் எனும் ஆய்வாளர்.
அந்த வியப்பு மிக்க ஹார்மோன்களின் தொழிற்பாடு என்ன? பௌதீக விதிகளை மீறும் சக்திகள் படைத்த மனிதர்களை வரலாற்றோடு பார்க்கலாம்.
நாயன்மார்களா? எப்படி அவர்களுக்கு சக்தி வந்தது? இப்போதும் அப்படியானவர்கன் இருக்கின்றார்களா? யேசுவின் அற்புதங்களுக்கும் இறைத்துவத்திற்கும் காரணம் என்ன தொடரும்... ,
முதற் பாகங்களை தவர விட்டவர்கள் இங்கே அழுத்தி படிக்கவும்

No comments:

Post a Comment