தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 16, 2017

சிவன் மனிதனா?? - கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு..!

யார் இந்த அனுமான்? நெற்றிக்கண் மனிதனுக்கு பறக்க முடியுமா??

சிவன் மனிதனா?? - கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு..!


மனிதன் கடவுள் அல்ல கடவுள் மனிதனும் அல்ல கடவுள் என்பவன் மத ரீதியாக வர்ணிக்கப்படுபவன் மட்டுமல்ல அறிவிற்கும் அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகின்றான்.
குறிப்பாக கடவுள் நம்பிக்கையையும் கடவுள்களை பாதிக்கும் வகையிலும் இது எழுதப்படவில்லை. விஞ்ஞான ரீதியான பதிவு மட்டுமே.
புலன் புறத்தெரிவு அல்லது ஆறாம் அறிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும்.
இது மனிதனை எவ்விதம் செயற்படுத்துகின்றது? புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியாக இது காணப்படுவது எவ்வாறு? மனிதனுக்கு அதீத சக்திகள் தோன்றுவது எவ்வாறு?
அந்த சக்திகள் கடவுள்களுக்கு நிகராகின்றதா? மனிதனும் கடவுள் ஆகின்றான். கடவுளும் மனிதா? என்ற ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டும் இந்த ஆய்வு....
புலன் புறத்தெரிவு அல்லது ஆறறிவு என்பதற்கான ஆங்கிலப் பதம் ஜே. பி. ரைன் எனும் உளவியலாளரால் உள்வாங்கப்பட்டது.
இவர் ஆறறிவு கொண்டவரின் திறமைகளான தொலை நுண்ணுணர்வு, புலன் கடந்த கேள்வி ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, மற்றும் அவர்களின் இம்மையூடான நடவடிக்கைகளான முன்னறிவு ஆகியனவற்றைக் குறிக்கப் பயன்படுத்தினார்.
புலன் புறத்தெரிவு சிலவேளைகளில் ஆறாம் அறிவாகக் குறிக்கப்படுகின்றது. புலன் புறத்தெரிவு இயற்கை இயற்காட்சி அல்லது மேலதிக உணர் புலப்பாடு எனவும் அர்த்தப்படுகின்றது.
மனித மூளைக்கு அபார சக்தியுண்டு அதுவே ESP (Extra sensory perception). சாதாரண மனிதர்களின் மூளையின்
உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது.
இந்த ESP சக்தியில்
இறந்த காலத்தை சொல்பவர்கள்.
எதிர்காலத்தை சொல்பவர்கள்.
நிகழ்காலத்தில் நடப்பவற்றை சொல்பவர்கள்.
பெளதீக விதிகளை மீறி அபார சக்திகளை வெளிப்படுத்துகின்றவர்கள் .
இவை தவிர இன்னும் பலவகை உள்ளது. அவை அவரவர் மூளையையும் சதன் சக்தியையும் வெளிப்படுத்துவதனைப் கொண்டு வகைப்படும். அல்லது அதிகரிக்கும்.
மூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி, அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.
இது யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.
சில எலிகளின் மூளையை பயன்படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் காரணமாகவே மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.
மூளையில் இருப்பது 4 பில்லியன் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன் படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை.
கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம் என்பது ஒப்பு கொண்ட உண்மை.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.
அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் உள்ளது. பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும், மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்.
அப்போது டாக்டர் ஷார்ல்ஸ் பேர்ட் என்பவர் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டடத்தின் ஜன்னல் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
இது கண்கட்சி வித்தையோ, அல்லது வீதி மேஜிக் கெயலோ அல்ல விஞ்ஞான ரீதியான ஆய்வு என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
பௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன....,
அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பதில்கள் பிரமிப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது அதுவே கடவுளும் மனிதன் தான் என்பதனை வலுப்படுத்தியது..,
சிவனுக்கு எப்படி தெய்வீக சக்தி கிடைத்தது, தெய்வங்களும் மனிதர்களா? 

யார் இந்த அனுமான்? நெற்றிக்கண் மனிதனுக்கு பறக்க முடியுமா??

சிவன் மனிதனா?? - கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு..! கடந்த வாரப் பதிவின் தொடர்ச்சி இது. பாகம் 1
இவ்வாறு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பதில்கள் பிரமிப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது அதுவே கடவுளும் மனிதன் தான் என்பதனை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 500 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக மனித மூளைக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது.
இராமாயண கதாபாத்திரமான அனுமான் தெய்வமாக வணங்கப்படுகின்றார். அவரும் அந்தரத்தில் பறப்பது, உடல் எடையைக் கூட்டுவது குறைப்பது போன்ற சக்திகளை கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் அனுமானும் மூளையின் ESP சக்தியினை பயன் படுத்தினாரா? என்ற கேள்வி எழக்கூடும்.
அதற்கு தியானம், தவம் போன்ற மன ஒரு நிலைபாட்டில் அனுமான் என்பவர் ஈடுபட்டு அதன் காரணமான இவ்வாறான சக்திகளை அவர் பெற்றுக் கொண்டிருக்கலாம் என்ற பதிலை ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அதே போல புராணத்தில் கூறப்படும் பல தெய்வங்களும், தேவதைகளும் இவ்வாறான அதீத சக்திகளினாலேயே கடவுள்களாக வர்ணிக்கப்பட்டிருக்கலாம் என்ற பார்வைக் கோணம் ஏற்படும். இதற்கு உதாரணமாக டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) என்பரை கூறலாம்.
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு இவர் தன் உடல் எடையை கூட்டிக் குறைத்தும் தனது எடல் எடையை விட பல்லாயிரம் கணக்கு அதிக எடை கொண்ட நிறையை தூக்குபவராகவும் அந்தரத்தில் பறக்கும் சக்தியையும் கொண்ட ஒருவராக காணப்பட்டார்.
இவரது இந்த ஆற்றல்கள் நவீன உலகில் நேரடியாக நிரூபிக்கப்பட்ட ஒரு உதாரணம்.
இதே போன்ற ESP சக்தியை அனுமான் போன்ற தெய்வங்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் அவர் தெய்வமாக பார்க்கப்பட்டாரா??? அந்த வகையில் விடைகாண முடியாத மர்மங்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றது.
அடுத்த விடயம் சில வேளை உங்களையும் இந்து மத நம்பிக்கையாளர்களையும் சிறிது கோபப்படுத்தலாம் மன்னித்து கொள்ளுங்கள். ஆன்மீகம், நாத்தீகத்தை தாண்டிய விஞ்ஞானம் மட்டுமே இவை.
இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவனும் மனிதனா?? என்ற சந்தேகமே அது. நிச்சயமாக இந்த விடயம் நம்பிக்கையை தாழ்வு படுத்துவது அல்ல, விஞ்ஞான ரீதியிலான பார்வை ஆய்வு மட்டுமே என்பதை மீண்டும் நினைவு படுத்துகின்றேன்.
நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன.
மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்வார்கள்.
வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதியுண்டு இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ உலக விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை.
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துவதன் மூலம் ESP சக்தியினை உண்டாக்க முடியும் ஆனால் இவ்வாறாக செயற்கையாக மூளையை தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அந்த வகை ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பும், விடையும் (வெளிப்படையான) கிடைக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது. இங்கு சிவனின் வடிவத்தை காட்டும் போது.,
சிவனுக்கு நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக் கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றது.
புராணங்கள் என்பது திருபு படுத்தப்பட்ட நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே. பார்த்தோமானால் சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும்.
அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம். என்பது ஆய்வாளர்களின் வாதம்.
அப்படி என்றால் ஏனைய கடவுள்கள் யார்? விடைகள் தொடரும் அடுத்த பதிவில்...,

http://www.tamilwin.com/science/01/130996
http://www.tamilwin.com/science/01/131970?ref=morenews

No comments:

Post a Comment