உலகில் 19ம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் ஒரே நபராக அறியப்படும் பெண்மணி ஒருவர் 17வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
இத்தாலியில் உள்ள மிலன் என்ற இடத்தில் பிறந்த எம்மா மொரானோ தான் வாழும் காலத்தில் இத்தாலியின் மூன்று அரசர்களின் ஆட்சிக்காலம், 11 போப்பாண்டவர்கள் மற்றும் இரண்டு உலகப் போர்களை பார்த்துவிட்டார்.
அவர் வாழும் மேகியோர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள பலான்ஸா என்ற இடத்தில் உள்ள மக்கள், இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையில், மூன்று நூற்றாண்டுகளின் வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு அலங்கார அணிவகுப்பை நடத்தினர்.