தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 14, 2016

இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆனால் இந்த அடிப்படை தேவைகளை நாம் அமைத்துக் கொள்வதற்கு நமக்கு செல்வம் மிகவும் அவசியமானது.
எனவே செல்வ வளம் நம்முடைய வீட்டில் அதிகமாக இருந்தால், நமது தேவைக்கேற்ப செலவுகளை செய்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளலாம்.
நமது வீட்டில் செல்வ வளம் செழிப்பாக இருக்க ஒருசில தெய்வீக வாஸ்துக்கள் உள்ளது.
  • நமது வீட்டில் பணம் மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்க வேண்டும். மேலும் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சாம்ராஜ்யம் வடக்கு திசையில் உள்ளதால், அந்த பெட்டியை வடக்கு திசையை நோக்கி திறக்க வேண்டும்.
  • வீட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாடிப் படிகளில், எந்த ஒரு கனமான இயந்திரங்கள் மற்றும் பொருளையும் அந்தப் பகுதியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், அந்தக் குழாயிலிருந்து வெளியேறும் நீரைப் போல, நமது வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறிவிடும்.
  • நமது வீட்டில் பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைக்க வேண்டும். இதனால், பெட்டியில் உள்ள பணம், கண்ணாடியில் பிரதிபலித்து, அந்த பணத்தின் செல்வ நிலையை இரண்டு மடங்கு அதிகப்படுத்தும்.
  • நமது வீட்டில் அதிகமாக செல்வ வளம் குறைவது போல தெரிந்தால், உடனே நமது வீட்டின் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வைக்க வேண்டும்.
  • நமது வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், நம்முடைய வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
  • நமது வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி இருக்குமாறு, தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
  • நாம் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்கள் அல்லது கோவில் இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். எனவே அவ்வாறு இருக்கும் இடத்தில் நாம் வீடு கட்டி குடியேறுவதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்க கூடாது. ஏனெனில் எப்போதுமே நம் வீட்டின் மையப்பகுதி காலியாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் அதிகமாகும்.
  • வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வமும் போய்விடும்.
  • நம் வீட்டின் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.
  • வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.
  • நம் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் செல்வ வளத்தை நமது வீட்டில் அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment