தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 20, 2016

காமசாஸ்திரம் கூறும் மணப் பெண்களுக்கான லட்சணங்கள்

அந்த காலத்தில் திருமணம் செய்தால், மணமக்களின் பண்புகள் மற்றும் அவர்களின் குணங்களை ஆராய்ந்து தான் மணம் முடிப்பார்கள்.
ஆனால் இந்தக் காலத்தில் ஜாதகம் பார்த்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் நடைமுறையில் நடந்து வருகின்றது.
அந்த வகையில், திருமண பெண்ணிற்கான காமசாஸ்திரம் கூறும் பத்து விதமான லட்சணங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மணப்பெண்களிடம் இருக்க வேண்டிய லட்சணங்கள்
  • மணப்பெண்கள் பூமியை போன்று பொறுமை குணமும், பிற்காலத்தில் குழந்தைகளை நன்கு வளர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • காதல், கருணை, பாசம், என்று அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் பிணைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
  • பெரியவர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்றும், அவர்களின் அறிவுரைகளை ஏற்கும் பண்புகளை பெற்று, குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • உலகத்தில் நடக்கும் நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் புத்திக்கூர்மை பெற்றிருக்க வேண்டும்.
  • குடும்பத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.
  • சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் பற்றி அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
  • குடும்ப வாழ்வில் அனைவரும் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்கான அறிவுரைகளை கூற வேண்டும்.
  • நமது வாழ்க்கையின் போது, கடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து, அவர்களை அரவணைத்து செல்லும் குணத்தை பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment