தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 நவம்பர், 2016

முத்துப்பாண்டி, ராசாப் பாண்டி, எதிர்பாண்டி... இதெல்லாம் என்ன தெரியுமா?


முத்துப்பாண்டி, ராசாப் பாண்டி, எதிர்பாண்டி... இதெல்லாம் என்ன தெரியுமா?- மறந்து போன மரபு விளையாட்டுகள்!

ஏழாங்காய் :

விளையாட்டுகள்

இந்த விளையாட்டை விளையாடாத பெண் குழந்தைகளே இருக்கமாட்டார்கள் எனச் சொல்லலாம். 'கழங்காடுதல்' இதன் பழங்காலப் பெயர். பல்வேறு ஊர்களில் 'தட்டாங்கல்' என்ற பெயரிலும் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. கூழாங்கற்கள், கருங்கற்கள், புளியங்கொட்டை போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாட முடியும். ஒரு கல்லை மட்டும் பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்துக் கொண்டு தரையில் மீதி கற்களை பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் கல்லை மேலே வீசி கீழே இருக்கும் கற்களில் ஒன்றை எடுக்க வேண்டும். அதே நேரம் மேலிருந்து வரும் கல்லையும் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் எடுத்ததும் அடுத்த சுற்றுக்கு போகலாம். இதில் மொத்தம் பத்து சுற்றுகள் வரை விளையாட வேண்டும், சில இடங்களில் எடுத்துக் கொள்ளும் காய்களின் எண்ணிக்கையை பொறுத்து அதன் சுற்றுகளின் எண்ணிக்கை வகுக்கப்படுகின்றன.

இந்த விளையாட்டில் சிறுமிகள் பாடும் பாடல் வரிகள் இவை..,

"முக்கூட்டு சிக்குட்டு பாவக்கா
முள்ளில்லாத ஏலக்கா,
நாங்கு சீங்கு
மரவள்ளி கிழங்கு,
ஐவார் அரக்கு
சம்பா சிலுக்கு,
அஞ்சு குத்து நாத்தனா
அழுவுறாண்டி மாப்புள,
ஏழுண்ணா என்கண்ண
எழுத்தபடியண்ண
கருத்த சொல்லண்ணே. "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக