தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 நவம்பர், 2016

பலாத்காரத்திற்கு என்ன காரணம்?

பெண்களுக்காக பிரத்யேகமான முறையில் பல்வேறு ஆடைகள் இருந்தாலும், எந்த ஆடை அவர்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் என்று யாரிடம் கேட்டாலும் “சேலை” என்ற தான் பதில் அளிப்பார்கள்.
ஏனெனில், சேலை தான் பெண்களின் உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்து காட்டுகிறது.
இதனால் பெண்களை சேலையில் பார்த்தவுடன் ஆண்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.
பெண்களின் ஆடை ஆண்களை தூண்டுவதால் தான் ஆண்கள், அவர்களை பலாத்காரம் செய்கின்றனர் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.
ஆனால், ஆடை மட்டுமே ஒரு பெண்ணை பிடிப்பதற்கு காரணம் இல்லை. அப்படி பார்த்தால் பள்ளி சிறுமிகள் கூட பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.
மாறாக, பெண் பால் என்றால் ஆண்களுக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையின் படைப்பு. அந்த ஈர்ப்பு ஆணுக்குள் கட்டுக்கடங்காமல் உணர்ச்சி பொங்கி எழும்நேரத்தில், ஒரு பெண்ணை பார்த்தால் அவனுக்கு பலாத்காரம் செய்ய தோன்றுகிறது.
ஒரு ஆண் எவ்வித காம உணர்வுகளும் இன்றி எந்த பெண்ணை பார்த்தாலும், அங்கு கற்பழிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஒரு ஆண் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்த பெண்ணை எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் தன் தாய், தங்கை, தோழி போல பார்க்கலாம்.
மற்றொருவன் முழுவதும் மூடிய உடையில் உள்ள பெண்ணைத் தவறான எண்ணத்திலும் பார்க்கலாம்.
இங்கு, பார்க்கும் பார்வையே வேறுபடுகிறதோ தவிர, ஆடைகள் எப்படி இருக்கிறது என்பது முன்வைக்கப்படவில்லை.
என்னதான், பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளால் ஆண்களை கவர்ந்திழுத்தாலும், இந்த ஆடை விடயம் என்பது இரண்டாம் விடயமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாறாக, ஆண் வர்க்கத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவதும், பெண் வர்க்கத்தால் ஆண்கள் ஈர்க்கப்படுவதும் பிறப்பில் உருவான ஒன்றே தவிர, உடலை மறைக்க பயன்படுத்தும் ஆடைகள் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக