தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 மார்ச், 2015

கண்டுகொள்ளபடாத கலைஞர் திரு.கவுண்டமணி ;


நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன் 'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம்.

ஆனால் கவுண்டமணியின் பெயர் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் விவேக்கைப் போல
பகுத்தறிவு என்னும் பெயரில் இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தை கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி.
வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும் தமிழ் சினிமாவின் பல மரபுகளைக் கவிழ்த்துப்போட்டவர்.
வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும் நொறுக்கியவர்.

'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க விரும்பாத பல அடித்தட்டுமக்களின் வேடங்களை ஏற்றவர் கவுண்டமணி அவர்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்து தான் இருக்க வேண்டியது இல்லை, இவருகென்று தமிழ் மக்களிடம் என்றும் தனி இடம் இருக்கும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக