தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

ரத்தம் குடிக்கும் மனித "வம்பையர்கள்" போலந்து நாட்டில் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ளார்களா ?


போலந்து நாட்டில் ஒருசவக்காலையில் உள்ள எலும்புக்கூடுகளை ஆராட்சி செய்த விஞஞானிகள், ரத்தம் குடிக்கும் மனித வம்பையர்கள் ஒரு காலத்தில் அங்கே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். புதையுண்டு காணப்படும் மனித எலும்புக் கூடுகளும், அவற்றின் மண்டையோடுகளும் படு பயங்கரமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒருவகை வௌவால் கடித்தால், மனிதன் இதுபோல வம்பையாராக மாறிவிடுவதாக புராணக் கதைகளில் கூறப்பட்டு வந்துள்ளது. இதனை பலர் சினிமாவிலும் பார்த்திருக்கலாம். ஆனால் நவீன உலகில் இது சாத்தியமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. ஆனால் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் வம்பயர் போல காட்சி தருவது பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு நோய் தாக்கம் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதன் காரணமாகவே அப்பகுதியில் பலர் புதைக்கபப்ட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதே இடத்தில் சில மண்டை ஓடுகள் கூரிய பற்கள் கொண்ட வம்பயர் போல காட்சி தருவதே பெரும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது. இவர்கள் உண்மையாகவே மனித மற்றும் விலங்குகளின் ரத்தத்தை குடித்து தான் வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராட்சிக்கு உட்படுத்தி வருகிறார்கள். விரைவில் இதற்கான விடைகள் கிடைத்துவிடும் என்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக