தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே!


கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி

கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

கற்பகம் எனவினை - கடிதேகும்;
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை

மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சது பொடிசெய்த - அதிதீரா;
அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்

அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் - பெருமாளே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக