தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பதிலுக்கு பதில் தருவாள் பத்தினி.


கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு,தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை. அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7.பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்..

மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ”மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!

நீதி: பதிலுக்கு பதில் தருவாள் பத்தினி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக