இவர்களுக்கெல்லாம் தண்டனையாக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தாலும், திரும்பி வரும் இவர்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்களா என்ன?
ஏன் சமுதாயம் இவ்வாறு கீழ்நோக்கி செல்கிறது.
சமீபத்தில் வேலூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே தலைகீழாக்கிவிட்டது, 10ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், தனது பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு மாணவியை வேட்டையாடியுள்ளான்.
வேட்டையாடியதோடு விட்டுவிடாமல், அந்த மாணவியை கொடூரமாக கொலை செய்துள்ளான்.
ஆபாச படங்கள்
ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் தாக்கமே இந்த மாணவனை இவ்வாறு செய்ய தூண்டியுள்ளன.
கடைகளில் விற்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பது, பின்னர் ஆசையை தீர்த்துக்கொள்ள சக மாணவியை நாடுவது.
அதுவும் அவள் சிறுமி என்றும் பாராமல், தான் ஒரு சிறுவன் என்றும் நினைக்காமல் தனது இச்சையை தீர்த்துக்கொள்வது.
வாடும் பெற்றோர்
குழந்தை இறந்த துக்கத்தில் குடும்பத்தினர் அழுது புலம்புகின்றனர், இதற்கு தமிழக முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்த நிதியுதவி அவர்களை ஆறுதல் படுத்தாது என்பது உண்மையே.
இவ்வாறு சிறுவர்கள், ஆபாச படங்களின் தாக்கத்தால் கெட்டுப்போவதால், முதலில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டும்.
கேலி, கிண்டலை தட்டிக் கேட்ட மாணவி: தீ வைத்து எரித்த வாலிபர்கள் |
|
வாரணாசியில் கிண்டல் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்ட 12ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். |
வாரணாசியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, சிக்ரா பொலிஸ் அதிகாரி ராகுல் மிஷ்ரா கூறுகையில், லாலாபுரா என்ற இடத்தில் உள்ள மாணவியின் வீட்டில் அவரது தாயை அடித்து தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த மாணவியின் மீது மூன்று வாலிபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த மாணவியை கபிசவுராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவியை தீ வைத்து கொளுத்திய மூன்று வாலிபர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவன் பெயர் பப்பு என்றும் இந்த மூன்று வாலிபர்கள் மீதும் ஐ.பி.சி 354 மற்றும் 326 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக