தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 டிசம்பர், 2014

35 வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்க....அவர்கள் சொல்லும் பதில் ??!!



எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் 35 வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்
அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் மனம் வருத்தமடைய செய்கிறது
1. அப்பா அம்மா எங்கள் ஜாதியில் தான் வரம் பார்க்கிறார்கள்
2.படித்து சம்பாதிக்கும் பெண் வேண்டுமாம்
3.வசதியான பெண் வேண்டுமாம் ...
சரிதான் ஒப்புக்கொள்கிறேன் அவர் சொல்வதை...
எனது கேள்வி...
1.நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் 2.உங்கள் சம்பாத்தியம் என்ன ..?
உங்கள் படிப்பு வசதிக்கு தகுந்தபோல் ஒருபெண்ணை தேர்வு செய்யுங்கள் அதன் பின் இருவரும் சேர்ந்து
உழைத்து சம்பாதியுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எதிர் காலத்தை பிரகாசமாக ஆக்குங்கள்
நாம் எதிர்பார்ப்பதுபோல் போல் தான் பெண் வீட்டாரும் எதிர்பார்ப்பார்கள் வசதியான பெண்ணை அவர்கள் வசதியான ஆணுக்குத்தான் மணம் முடிப்பார்கள் எத்தனையோ ஏழை பெண்கள் படித்தவர்கள்
இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்வு கொடுங்கள் எதிர் காலத்தை பிரகாசமாக ஆக்குங்கள்
அதன் பின் சம்பாதியுங்கள் ...வயது போனால் சம்பாதிக்கமுடியாது பணத்தை மட்டும் அல்ல வயதையும் நண்பர்களே ...வாழ்க்கை வாழ்வதற்க்கே...
பெரியவர்கள் வாழ்ந்தவர்கள் ...நீங்கள் வாழப்போறவர்கள் வாழ்க்கை உங்கள் கையில் ...
வாழ்த்துக்கள் நண்பர்களே
அன்புடன்.....
ராஜ்பிரியா
உண்மையல்ல காரணம் அவர்களுக்கு இன்னும் அமையவில்லை,அல்லது அவர்கள் விரும்பவில்லை!அவர்கள் எதிர்பார்க்கும் பெண்ணை இதுவரை காணவில்லை,கவரவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக