தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பூ

வாழை மரத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்காதவை.
இதில் வாழைப்பூவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விதவிதமான பயிரிடப்படும் வாழைகளில் மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும். வாழைப்பூ வடை, கட்லெட், பக்கோடா என பலகாரங்களாகவும் செய்து உண்ணப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை பற்றி பார்க்கலாம்.
இரத்தத்தில் கொழுப்பை குறைக்கும்
வாழைப்பூவை உணவாக இரு வாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புசத்து அதிகப்படியாக இருப்பதால் ரத்த சோகை என்பது தலை தூக்காது.
இரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும்
துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.
வயிற்றுப்புண் குணமாக
இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம் மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை, இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம்.
மாதவிடாய் பிரச்சனை
மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள் மூல - வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் இவைகள் எல்லாம் நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக