தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

ரத்த அழுத்தம் என்றால் என்ன?


ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்த காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொளிகின்றன. இளைஞர்களின் உடல் உழைப்பில்லா, பரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப்போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

high-blood-pressure-and-life-insurance

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ரத்த அழுத்த நோய அல்லது ரத்தக் கொதிப்பு என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப்பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தஹி ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை சைலன்ட் கில்லர் என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1732ல் ஸ்டீபன் ஹேல்ஸ் என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண மானோ மீட்டர் என்ற கருவியை வைத்து அளந்தார். 1896ல் சிவரோசி என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ஸ்பிக்மோ மானோ மீட்டரி கண்டுபிடித்தார். 1905ல் தான் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டு கழகம் தான் கண்டுபிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மருத்துவம் பயின்ற இவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ரத்த நோயாளி எனக் கூறலாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1) கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105வரை.

2) 106 முதல் 115 வரை.

3) 115க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது?

1) காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

2) மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்கங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்த கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தைக் கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற்பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதன் மூலம் இந்நோய்க்கான காரணங்களைக் கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமை சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும். இதில் சீருநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி.ஜி’ என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் பலவீனமாக உள்ளதா என்பதை அறிய எக்ஸ்ரே பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போன்ற பரிசொதனைக்ளைக்கூட செய்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன்முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக கால்வீக்கம், ரத்தகொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருத்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்துவிடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயைக் கடுபடுத்தாவிட்டால் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.உப்பு, உடலில் நீரைத் தங்கச் சுத்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகளை வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு சத்து ரத்த குழாய்களை அடைத்துக்கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக்கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்பு சத்து சேர்வதை தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள்.

புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு மாரடைப்பு நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும். மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள்.

உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்து கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக்கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுதும் உபயோகிக்கக்கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக