தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஜூலை, 2013

யார் தலித்?

தெரிந்த தகவல்கள் தெரியாத உண்மைகள்

Monday, June 17, 2013
யார் தலித்?
பொதுவாக 'தலித்' என்றால் 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்றும், SC பட்டியலில் இருப்பவர்கள் என்றும் அர்த்தம் கர்ப்பிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சூத்திரர்களும், சண்டாளர்களும்/பஞ்சமர்களும் தலித்துகலாம். மனு சாத்திர படி 'சூத்திரர்கள்' ஒடுக்கப்பட்டவர்கள் தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் 'சூத்திரர்கள்' மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களா...?

அதற்க்கு முன்பு, 'தலித்' என்பது ஒரு வர்க்கம் என்றும், அது சாதியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எப்படி 'தலித்' என்ற வர்க்கம், குறிப்பாக ஒரு சில சாதிகளை மட்டுமே குறிக்கும் குறியீடாக யாரால் ஆக்கப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது 'மனு' அடிப்படையில் 'ஒடுக்கப்பட்டோர்' யார் யார் என்று பார்ப்போம். இந்த ஆய்வின் முடிவில் சூத்திரர்கள் மட்டும் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், 'தலித்'துகள் என்றும் சொல்லப்படுவது சரி தானா என்பதையும் அலசுவோம்.

* மனு சாத்திர படி 'பிராமண பெண்களும்' தலித்கள் தான். அதாவது ஒடுக்கப்பட்டவர்கள்(oppressed).
"Code of Manu states, "In childhood a female must be subject to her father,in youth to her husband, then to her sons; a woman must never be independent.There is no God on earth for a woman than her husband.....She must on the death of her husband allow herself to be burnt alive on the same funeral pyre. That everyone will praise her virtue""

(Referrence:
http://thathachariyar.blogspot.in/2010/11/33.html
http://dalitnation.wordpress.com/2007/12/14/why-babasaheb-married-a-brahmin/)

* மனு சாத்திரப்படி சத்ரிய,வைசியர்களும் ஒடுக்கப்பட்டவர்களே.

=> நூறு வயதான ஒரு சத்ரியன், பத்து வயது பிராமணனை தந்தை போல நடத்த வேண்டும்
"A hundred year old Kshatriya must treat a ten year old Brahmin boy as his father. (Manu 11-135)"

=> ஒரு பிராமணன் மற்ற வர்ணத்தை சேர்ந்த எவரையும் சாப்பிட அழைக்க கூடாது. பிராமணன் தான் உண்ட மிச்சத்தை அவர்களுக்கு தரலாம். அப்படி இருக்கும் மிச்ச மீதி உணம்வையும் தன கையால் பிராமணன் தர கூடாது. வீட்டிற்கு வெளியே இருக்கும் மற்ற வர்ண ஆட்களின் மூலம் தான் அதை செய்ய வேண்டும்.
"The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu II2)"

இதில் இருந்து பார்ப்பனர்கள் அல்லாத அனைவருமே பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், சூத்திரரர்கள் மட்டும் அல்ல சத்ரியர்களும்,வைசியர்களும் தான் 'தலித்'(ஒடுக்கப்பட்டோர்) என்பதும் மனு கூறும் உண்மை ஆகும். இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட படி நிலையில் இரண்டாவது நிலையில் இருப்பவன்(சத்ரியன்) தனக்கு கீழ் படிநிலையில் இருப்பவனை ஒடுக்குவது அபத்தம் அல்லவா? உண்மையில் 2,3,4 என அனைவரும் சேர்ந்து தானே உங்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தும் 'பிராமணரை' எதிர்க்க வேண்டும்? எனவே, சூத்திர தலித்துகளோடு, வைசிய தலித்துகளும், சத்ரிய தலித்துகளும் ஒன்று இனைந்து பார்ப்பனர்களை எதிர்ப்போம் வாருங்கள்.

(குறிப்பு: ஆரியம், திராவிடம், தலித்தியம் --- இவை மூன்றுமே எதிரி போட்டு கொடுத்த பாதை. என்றைக்குமே முடிவை தராத, ஒர்மையை ஏற்ப்படுத்தாத பாதைகள் இவை. இந்த உண்மையை புரிந்து கொள்வோம். தமிழன் என்ற ஓர்மையில் திரள்வோம்)

-- ம.பொன்ராஜ் காலாடி --??????????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக