தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூலை, 2013

ஆடி மாசம் பொறந்துடுச்சி..


ஆடி மாசம் பொறந்துடுச்சி..சூரியன் கடக ராசிக்கு போகிறார் அது சந்திரன் ராசி...சந்திரன் உடல் மனக்காரகன் அங்கு நெருப்பு கிரகம் சூரியன் போவது ...என்றால் தண்ணீருக்குள் நெருப்பை போட்டா என்னாகும்..?கொதிக்கும்...ஆவியாகும்..நெருப்பும் அணையும்..அதனால் இந்த மாசம் சுப காரியத்துக்கு ஆகாது...நோய்கள் பெருகும் மாசம்..அதனால் நோய் எதிர்ப்பு சக்திகளான இயற்கை கொடுத்த மருந்துகள் வேப்பிலையும் ,மஞ்சளையும்..அதிகம் உபயோகித்து அம்மன் திருவிழாக்கள் தொடங்கும்..காதல் ராசியான கடகத்தில் நெருப்பு கிரகம் புகுந்தா காதல் விளங்குமா..? அதான் இந்த மாசத்துல கல்யாணம் வேண்டாம்னு பெரியவங்க சொன்னாங்க..கருவும் தங்காத மாசம் என்றுதான் புது ஜோடிகளையும் பிரிச்சு வெச்சாங்க அப்படி உருவாகும் கரு சித்திரையில் பிறந்து கொடூர எண்ணங்களும்,கோபமும் நிறைந்த குணவானாகவும்,அனைவரிடமும் பகை உண்டாக்கி கொள்கிறவனாகவும் இருப்பான்..!!

அனைவருக்கும் அம்மன் அருள் உண்டாகட்டும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக