தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, July 5, 2017

பூமியில் தோண்டப்பட்ட பிரம்மாண்ட குழிகள் :கடத்தப்படும் மாதிரிகள்! வெளியேறியது என்ன?

மாறுபட்ட உலகில் பல விசித்திரங்கள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றுக்கான விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர தேடல்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பல மர்ம முடிச்சுகளுக்கு விடைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும் அவற்றுக்கான பதில்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.
காரணம் அவ்வாறு வெளிப்படுத்தப்படும் போது மனிதவாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகவே அவை மறைக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர்.
அப்படியான விடைகள் வெளிப்படுத்தப்படாத ஓர் விடயமே ரஷ்யாவில் பல பகுதிகளிலும், பூமியின் பல இடங்களிலும் உருவாகிய (உருவாக்கப்பட்ட) பாரிய வட்ட வடிவிலான துளைகள் ஆகும்.
1980ஆம் ஆண்டு முதல் முதலாக இவ்வாறான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் கூட இவ்வாறான துளைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூமிக்கு அடியில் ஏற்படும் வாயுக்களின் தாக்கம் காரணமாக இவ்வாறான பாரிய துளைகள் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள போதும் முற்று முழுதாக இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காரணம் இவை உருவாகியுள்ள இடங்கள். வெவ்வேறான பகுதிகளிலேயே இவ்வாறான துளைகள் உருவாகி உள்ள காரணத்தினால் இந்தக் கருத்துக்கு மாற்றுக்கருத்து உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த துளைகளை மேலோட்டமாக அவதானிக்கும் போதே அவை செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேபோல பல பிரம்மாண்டமான ஆழம் கொண்ட துளைகள் உருவாக்கப்பட்ட இடத்தில், துளையில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் எங்கே போனது என்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பாக உள்ளது.
ரோமானோவ்ஸ்கி லைவ்சைஸ் எனும் ஆய்வாளர் “இந்தத் துளைகளை அவதானிக்கும் போது மேலிருந்து தோண்டப்பட்டதாக கருத முடியவில்லை. நிலத்திற்கு உள்ளே இருந்து வெளியே தோண்டப்பட்டு வந்ததாகவே உள்ளது.
எனவே உள்ளிருந்து ஏதாவது வெளியேறி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சில ஆய்வாளர்கள் பூமியின் மண் மாதிரிகள் இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
மற்றும் இந்தத் துளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஆழத்திலும் வட்ட வடிவிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயிலும் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் இது குறித்த விடையினை அறிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/151093

No comments:

Post a Comment