************************** **********
இந்து தொன்மவியல் கூறப்படுகின்ற கடவுள்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவு நிலைப்பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
*திருமால்
வைணவர்களின் முழுமுதற்கடவுளான திருமால் சிவபெருமானின் மனைவியான உமையம்மையின் அண்ணாக போற்றப்படுகிறார். இதனால் திருமால் சிவபெருமானின் குழந்தைகளான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாகவும் அறியப்படுகிறார்.
படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கும் திருமாலிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற கருத்துவேறுபாடு எழுந்த பொழுது, சிவபெருமான் லிங்கோத்தபவராக காட்சியளித்தார். அவருடைய அடியை காண திருமால் வராக அவதாரம் எடுத்துச் சென்றதாகவும், பிரம்மா முடியைக்காண அன்னமாக எடுத்துச் சென்றதாகவும் இருவரும் அதில் தோல்வியடைந்து சிவனையே முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொண்டதாகவும் இந்து நூல்கள் கூறுகி்ன்றன. இதனை விளக்கும் பொருட்டு லிங்கோத்பவர் திருமேனி சிவாலயங்களில் அமைக்கப்பெறுகிறது.
தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகவரம்பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினை காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
*பிரம்மன்
இலிங்கோத்பவராக காட்சியளித்த சிவபெருமானின் முடி தேடி சென்ற பிரம்மா, சிவமுடியிலிருந்து கீழே விழுந்த தாழ்ம்பூவின் துணையோடு தான் சிவமுடியை கண்டதாக பொய்யுரைத்தார். இதனால் பிரம்மாவின் வழிபாடு எங்கும் இல்லாதபோக சாபம் கிடைத்தது.
பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான தட்சன் கடுந்தவம் இயற்றி உமையம்மையை மகளாக பெற்றார். தந்தைக்கு மறுக்கப்பட்ட பூசையால் சிவனை வெறுத்தார். உமையம்மையே தாட்சாயினியாக அவதாரம் எடுத்தது அறிந்திருந்தும், சிவபெருமானுக்கு மணம் செய்விக்க மறுத்தார். இருந்தும் மும்மூர்த்திகளும், தேவர்களும் வலியுறுத்தி சிவ தாட்சாயிணி திருமணத்தினை நடத்திவைத்தனர்.
*ஆதிசக்தி
கல்ப கோடி ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னில் ஒரு பாதியை ஆதிசக்தியாக வெளிபடுத்தினார். இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை தோற்றுவித்தனர் என சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி பூமியில் தட்சனின் மகள் தாட்சாயினியாக பிறந்து சிவபெருமானை மணந்தார். தட்சன் சிவபெருமானை வெறுத்தமையால், தன்னுடைய யாகத்திற்கு சிவபெருமானை அழையாமல் இருந்தார். இதை அறிந்த தாட்சாயினி தட்சனின் யாகத்தினை பூர்த்தியாகமல் செய்ய அதில் விழுந்து மறித்தார். பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்தார். கடுந்தவம் புரிந்து சிவபெருமானின் மனைவியானார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இருகுழந்தைகள் உள்ளனர்.
*விநாயகன்
கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையை தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
*முருகன்
சூரன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றை கார்த்தைகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.
கயிலை வந்த பிரம்மனிடம் படைப்பின் மூலமான பிரணவத்தின் பொருள் கேட்ட முருகன், பிரம்மன் அதை அறியாததால் சிறையில் இட்டார். தேவர்கள் வேண்ட சிவபெருமான் பிரம்மனை விடுக்க முருகனிடம் கோரி, பிரணவத்தின் பொருளை தனக்கு உரைக்கும் படி கூறினார். சிவபெருமானுக்கு குருவாக இருந்து முருகன் உபதேசம் செய்தமையால் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
*சிறுதெய்வங்கள்
இந்து சமயத்தில் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்பெறும் நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் சிவனுடைய அம்சமாக கருதப்படுகின்றன. மாசி பெரியசாமி, முனியப்பசாமி, தன்னாசியப்பன் என பல நாட்டார் தெய்வங்கள் சிவ வழிபாட்டிற்குள் வருகின்றன. சமணர்களின் மாசாத்தன் எனும் சிறு தெய்வம் சிவனின் மகனாக மாறியதாகவும் கருத்துண்டு [28] இந்த தெய்வங்கள் திருநீறு அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. இந்த தெய்வங்களின் பிரசாதமாக சைவ அடையாளமான திருநீர் வழங்கப்படுகிறது.
இந்து தொன்மவியல் கூறப்படுகின்ற கடவுள்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவு நிலைப்பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
*திருமால்
வைணவர்களின் முழுமுதற்கடவுளான திருமால் சிவபெருமானின் மனைவியான உமையம்மையின் அண்ணாக போற்றப்படுகிறார். இதனால் திருமால் சிவபெருமானின் குழந்தைகளான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாகவும் அறியப்படுகிறார்.
படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கும் திருமாலிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற கருத்துவேறுபாடு எழுந்த பொழுது, சிவபெருமான் லிங்கோத்தபவராக காட்சியளித்தார். அவருடைய அடியை காண திருமால் வராக அவதாரம் எடுத்துச் சென்றதாகவும், பிரம்மா முடியைக்காண அன்னமாக எடுத்துச் சென்றதாகவும் இருவரும் அதில் தோல்வியடைந்து சிவனையே முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொண்டதாகவும் இந்து நூல்கள் கூறுகி்ன்றன. இதனை விளக்கும் பொருட்டு லிங்கோத்பவர் திருமேனி சிவாலயங்களில் அமைக்கப்பெறுகிறது.
தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகவரம்பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினை காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
*பிரம்மன்
இலிங்கோத்பவராக காட்சியளித்த சிவபெருமானின் முடி தேடி சென்ற பிரம்மா, சிவமுடியிலிருந்து கீழே விழுந்த தாழ்ம்பூவின் துணையோடு தான் சிவமுடியை கண்டதாக பொய்யுரைத்தார். இதனால் பிரம்மாவின் வழிபாடு எங்கும் இல்லாதபோக சாபம் கிடைத்தது.
பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான தட்சன் கடுந்தவம் இயற்றி உமையம்மையை மகளாக பெற்றார். தந்தைக்கு மறுக்கப்பட்ட பூசையால் சிவனை வெறுத்தார். உமையம்மையே தாட்சாயினியாக அவதாரம் எடுத்தது அறிந்திருந்தும், சிவபெருமானுக்கு மணம் செய்விக்க மறுத்தார். இருந்தும் மும்மூர்த்திகளும், தேவர்களும் வலியுறுத்தி சிவ தாட்சாயிணி திருமணத்தினை நடத்திவைத்தனர்.
*ஆதிசக்தி
கல்ப கோடி ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னில் ஒரு பாதியை ஆதிசக்தியாக வெளிபடுத்தினார். இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை தோற்றுவித்தனர் என சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி பூமியில் தட்சனின் மகள் தாட்சாயினியாக பிறந்து சிவபெருமானை மணந்தார். தட்சன் சிவபெருமானை வெறுத்தமையால், தன்னுடைய யாகத்திற்கு சிவபெருமானை அழையாமல் இருந்தார். இதை அறிந்த தாட்சாயினி தட்சனின் யாகத்தினை பூர்த்தியாகமல் செய்ய அதில் விழுந்து மறித்தார். பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்தார். கடுந்தவம் புரிந்து சிவபெருமானின் மனைவியானார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இருகுழந்தைகள் உள்ளனர்.
*விநாயகன்
கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையை தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
*முருகன்
சூரன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றை கார்த்தைகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.
கயிலை வந்த பிரம்மனிடம் படைப்பின் மூலமான பிரணவத்தின் பொருள் கேட்ட முருகன், பிரம்மன் அதை அறியாததால் சிறையில் இட்டார். தேவர்கள் வேண்ட சிவபெருமான் பிரம்மனை விடுக்க முருகனிடம் கோரி, பிரணவத்தின் பொருளை தனக்கு உரைக்கும் படி கூறினார். சிவபெருமானுக்கு குருவாக இருந்து முருகன் உபதேசம் செய்தமையால் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
*சிறுதெய்வங்கள்
இந்து சமயத்தில் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்பெறும் நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் சிவனுடைய அம்சமாக கருதப்படுகின்றன. மாசி பெரியசாமி, முனியப்பசாமி, தன்னாசியப்பன் என பல நாட்டார் தெய்வங்கள் சிவ வழிபாட்டிற்குள் வருகின்றன. சமணர்களின் மாசாத்தன் எனும் சிறு தெய்வம் சிவனின் மகனாக மாறியதாகவும் கருத்துண்டு [28] இந்த தெய்வங்கள் திருநீறு அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. இந்த தெய்வங்களின் பிரசாதமாக சைவ அடையாளமான திருநீர் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக