தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மே, 2014

வாயு தொல்லைக்கு பலா கொட்டை சாப்பிடுங்கள்!



சிலருக்கு வாயு தொல்லையால் வயிறு வீங்கி, கர்ப்பிணி போன்ற தோற்றம் இருந்தால், நான்கு அல்லது ஐந்து பலாக்கொட்டைகளை தணலில் சுட்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்குவதுடன், வயிறும் சிக்கொன்றாகிவிடும்.
* உடல் சூட்டினால் சிலருக்கு வயிறு வீங்கிப் போகலாம். சிலருக்கு சூட்டினால் உடல் களைத்துப் போகலாம். இவர்கள் பலா இலையில் சாதத்தை சூடாகப் போட்டு சாப்பிட்டால், உடலின் சூடு தணிந்து பொலிவும் புத்துணர்வும் அதிகரிக்கும்.
* சிலருக்கு, மலச்சிக்கலால் முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, அரிப்பெடுக்கும். சீல் கோத்து வடுக்கள் தோன்றி, முகம் பார்க்கவே அசிங்கமாகிவிடும். இந்த சிக்கலைப் போக்கி சிங்கார அழகைக் கொடுக்கிறது பலா வேர்.
* பலா வேரைத் துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அதை வடிகட்டி ஒரு டம்ளர் குடியுங்கள். இது மலமிளக்கியாகச் செயல்பட்டு, பருக்களைப் போக்கிப் பொலிவைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக