காதல் அடக்கப்படவேண்டிய அழிக்கப்படவேண்டிய ஒரு உணர்வு. ஏனெனில் அது சுதந்திர மனத்தின் அடையாளம். சுய சிந்தனையின் - சுய உணர்வின் ஆரம்பம். சுயம் பலப்பட்டால் மனிதன் சமுதாயத் தளைகளிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு விடுவான். ஆக சுயம் பலம்பெறும் அனைத்தும் நசுக்கப்பட வேண்டும். இதற்கு கற்பு பற்றிய எண்ணங்களும் கவர்ச்சிமிகு வருணனைகளும் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களாகி விடுகின்றன.
தன் வீட்டுக் கணவனின் தீநடத்தையை சகித்துக்கொள்ள - ஏற்றுக்கொள்ள - ஏமாற - ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணகிகளும் நளாயினிகளும் தேவைப்படுகின்றனர். கற்புக்கரசிகளை தெய்வமாக்க வேண்டியதுதான். பத்தினிக் கோட்டங்களை ஆங்காங்கே உருவாக்க வேண்டியதுதான். ஏனெனில் கற்புக்கரசர்களுக்கும் அவர்தம் கோட்டங்களுக்கும் எங்கே போவது ?காதல் அடக்கப்படவேண்டிய அழிக்கப்படவேண்டிய ஒரு உணர்வு. ஏனெனில் அது சுதந்திர மனத்தின் அடையாளம். சுய சிந்தனையின் - சுய உணர்வின் ஆரம்பம். சுயம் பலப்பட்டால் மனிதன் சமுதாயத் தளைகளிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு விடுவான். ஆக சுயம் பலம்பெறும் அனைத்தும் நசுக்கப்பட வேண்டும். இதற்கு கற்பு பற்றிய எண்ணங்களும் கவர்ச்சிமிகு வருணனைகளும் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களாகி விடுகின்றன.
தன் வீட்டுக் கணவனின் தீநடத்தையை சகித்துக்கொள்ள - ஏற்றுக்கொள்ள - ஏமாற - ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணகிகளும் நளாயினிகளும் தேவைப்படுகின்றனர். கற்புக்கரசிகளை தெய்வமாக்க வேண்டியதுதான். பத்தினிக் கோட்டங்களை ஆங்காங்கே உருவாக்க வேண்டியதுதான். ஏனெனில் கற்புக்கரசர்களுக்கும் அவர்தம் கோட்டங்களுக்கும் எங்கே போவது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக