தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

பிழை திருத்தும் கணிணி பேனா....!! ---------------------------------------------------


சாதாரணமாக நாம் எழுதிகொண்டிருக்கும் போது பிழை ஏற்படுவது இயல்பு. அதுவும் கற்றுக்கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் என்றால் நிறைய பிழைகள் ஏற்படத்தான் செய்யும். இதை தவிர்ப்பதற்காகவே ஜெர்மணி நாட்டு டேனியல் காஷ்மஷர் என்பவர் தவறில்லாமல் எழுத Super tech computer pen-ஐ கண்டுபிடித்துள்ளார். மேலும் இவர் நண்பர் ஒருவரின் குழந்தை எழுதுவதற்கு சிரம்படுவதைக் கண்டு நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த பிழை திருத்தும் பேனா ஒன்றினை உருவாக்கியுள்ளார். இந்த பேனாவை வைத்து எழுதும்பொழுது, பிழையாக எழுதினால் உடனே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி பிழையை சுட்டிக் காட்டும். இதற்காக இதனுடன் Mini Battery ஒன்றும், மிகச்சிறிய Computer ஒன்றையும் இணைத்துள்ளாராம்.

நண்பனின் குழந்தைக்காக இப்பேனாவினை கண்டு பிடித்தாலும், அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பேனா உபயோகப்படும்என்று அவர் கூறியுள்ளார். இனி, குழந்தைகள் தவறாக எழுதுவிடுவோமோ என்ற கவலை படத்தேவையே இல்லை. அவர்கள் தவறில்லாமல் எழுத Super tech computer pen பேனா பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதை பள்ளியில் அனுமதிப்பார்களா என்று தான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக