தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஜனவரி, 2015

வாழ்வியல் உண்மைகள் - தெரிந்துகொள்வோம் :-


1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.
2. அனைவரும் நம் உறவினர்.
3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.
4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.
5. சிறியோர் என யாரையும் இகழாதீர்.
6. தன்னலமாய் வாழாதீர்.
7. பிறர் நலம் பேணி வாழ்வீர்.
8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.
9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.
10. வெற்றி கண்டு மயங்காதீர்.
11. வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15. அன்பே வாழ்வின் அடிப்படை.
16. அருள் வாழ்வே அறவாழ்வு.
17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26. பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக