தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 21, 2015

இலங்கையின் ஆதி குடிகள் தமிழர்கள்தான் என்பதற்கான ஆதாரம்.!!



1956 ஆம் ஆண்டில் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.

குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையைப் பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

பலரின் எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அரசானது, விஜயனின் வருகை பற்றிய தபால் தலையை வாபஸ் பெற்றுக் கொண்டது.

என்னதான் இலங்கை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும்... இலங்கை அரசே வெளியிட்ட தபால் தலை என்பதால் இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்கள்தான் என்பதை 1956 ஆல் ஆட்சி புரிந்த இலங்கை அரசே வெளிப்படையாக அறிவித்து விட்டதென்பதை இப்போதுள்ள சிங்கள அரசும் பௌத்த பேரினவாதிகளும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது!!!

No comments:

Post a Comment