தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஜூன், 2015

ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட தந்தையும் மகனும் கைது!

ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தந்தையொருவரையும் மகனொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பலங்கொட வதுகெதர பெட்டிவத்த பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஆயுத உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை இடக்கூடிய கைத்துப்பாக்கி தோட்டாக்கள் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை அம்பலங்கொடை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மகனை இன்று கைது செய்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 வயதான இளைஞர் ஒருவரிடம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று காணப்பட்டதனை பொலிஸார் கண்டு பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது தமது தந்தை இவ்வாறான ஆயுதங்களை தயாரித்து வருவதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த இளைஞரையும் அவரது தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக