தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2017

சீகிரிய வரலாற்று பொக்கிஷத்தில் இருப்பது சிங்கம் அல்ல புலி! புதிய சர்ச்சையை ஏற்படுத்திய தேரர்

தம்புள்ளையில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் சீகிரிய மலைக்குன்றில் காணப்படும் மிருகத்தின் பாதம் சிங்கத்தினுடையது அல்ல புலியினுடையது என கருத்துக்கள் எழுந்துள்ளன.
ரங்கிரி - தம்புளை விகாரையின் விகாராதிபதியும் பேராசிரியருமான இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சின்னமாகிய சீகிரிய மலைக்குன்றின் உச்சியில் உள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான வாயின் இரு பக்கத்திலும் மிருகமொன்றின் இரண்டு பாதங்கள் காணப்படுகின்றன.
இவை சிங்கத்தின் பாதங்கள் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவை சிங்கத்தின் பாதங்கள் அல்ல புலியின் பாதங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, அங்கிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. அதனை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், ராஜமாளிகைக்குச் செல்வதற்கான வாயில் உள்ள மிருகத்தின் கால்களில் தலா மூன்று நகங்களை கொண்ட பாதங்களே உள்ளன.
எனினும், சிங்கத்தின் பாதத்தில் முடிகளுடன் கூடிய நான்கு விரல்கள் இருக்கின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், சிங்கத்தின் பாத அமைப்புக்கும் புலியின் பாத அமைப்புக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக