தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 ஜூலை, 2015

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் மார்பகங்கள் வளரும் !

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் மனிதன் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறான்.
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ‘ரோக் ஸார்சோன்’ (Roxar- sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கவல்லது என்று அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு, பெண்களின் மார்பகங்கள் பெரிதாகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
பிராய்லர் கோழிகளை வளர்க்கும்போது, அதன் சிறகு பகுதி வழியாகத்தான் வளர்ச்சிக்கான ஊசி போடப்படுகிறது.
இந்த கோழிகளை நாம் சாப்பிடும்போது, நமது உடலிலும் செல் மாற்றங்கள் ஏற்படும்.
ஹார்மோன் சுரப்பதில் வேறுபாடு போன்றவவை ஏற்படுகின்றன. சீனாவை சேர்ந்த 26 வயது லி என்ற வாலிபர் சிக்கன் உணவுக்கு அடிமையானதால் அவருக்கு மார்பகங்கள் வளர்ந்துள்ளன.
அவரது உடலில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்த அளவுகளில் இருக்க வேண்டிய ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டெர்ன் ஹார்மோன்கள், மாறுபட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம், அவர் பிராய்லர் சிக்கனை இவர் அதிகமாக சாப்பிட்டதோ ஆகும்.
பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக